சனி, 7 ஆகஸ்ட், 2010

உலக வார்த்தையும் தேவனுடைய வசனமும்


1. உலகம்: எம்மதமும் சம்மதம்.
    தேவன்: நான். நானே கர்த்தர். என்னையல்லாமல் இரட்சகர் இல்லை
    (ஏசா 43:15)


2.  உலகம்: எல்லாரும் இந்நாட்டு மன்னர்
    தேவன்: என் இராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல. யோவா 18:36

3.  உலகம்:  மனிதன் தன் சூழ்நிலைக்கேற்றவாறு தனுடைய வாழ்க்கையை   
                      மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்
     தேவன்: நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல். 
                        உங்கள்  மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர்12:2)

4. உலகம்: உழுபவனுக்கே நிலம் சொந்தம்
     தேவன்: பூமியும் அதன் நிரைவும் , உலகமும் அதிலுள்ள குடிகளும்
                     கர்த்தருடையது (சங் 24:1)

5. உலகம்: சுபிட்சமான நல்வாழ்வு உதயமாக முதலாவது ஒவ்வொரு
                      மனிதனுக்கும் உணவு,உடை,உறவிடம் ஆகியவை அளிக்கப்பட   
                     வேண்டும்
    தேவன்: முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய 
                     நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் 
                    உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33)

6. உலகம்: அணு ஆயுதங்களை தடை செய்தால் தான் யுத்த அபாயம் நீங்கி
                        உலகில் சமாதானம் உண்டாகும்
     தேவன்: சமாதானத்தின் வழியை அவர்கள் அறியார்கள் (ரோமர் 3:17)
                       என்னுடைய சமாதானத்தையே உஙக்ளுக்கு கொடுக்கிறேன்.
                       உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக்
                       கொடுக்கிறதில்லை (யோவா 14:27)

7. உலகம்: சன்மார்க்க ஜீவியத்தின் மூலம் மனிதன் முக்தியடைய முடியும்.
       தேவன்: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய
                         ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே நான்
                         உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோவா 3:3,4)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.